Skip to main content

பாலில் விஷம் கலந்து குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பி ஓடிய அபிராமி கைது!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
ab

 

சென்னை அடுத்த குன்றத்தூரில் பாலில் விஷம் கலந்து தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பி ஓடிய அபிராமியை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்தனர்.  சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில்  வாடகை வீட்டில் வசித்து வருகிறர் விஜய் (30). சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு லோன் பிரிவில் இவர் வேலை செய்து வருகிறார்.  இவருடைய மனைவி அபிராமி (25). இத்தம்பதிக்கு  அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.  இந்நிலையில்,  வங்கியில் திடீரென அமைந்துவிட்ட இரவுப்பணி முடிந்து நேற்று காலையில் விஜய் வீட்டிற்கு வந்தபோது,  அங்கே தன் இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர்.  மனைவி அபிராமியை காணவில்லை.  அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போனை அவர் எடுக்கவில்லை.  இதையடுத்து சந்தேகம் அடைந்த விஜய் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே,  குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில் அபிராமிக்கு நெருக்கமான சுந்தரம் என்பவரை விசாரித்தபோது,  கணவன் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொலை செய்ய அபிராமி திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.  விஜய் அன்று இரவு வராததால் குழந்தைகளுக்கு மட்டும் விஷம் கலந்த பாலை கொடுத்து அவர்கள் இறந்துவிட்டனர் என்று தெரிந்ததும் வீட்டில் இருந்து கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு தப்பிவிட்டார் என்று தெரியவந்தது.

 

இதன்பின்னர் தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அவர் பிடிபட்டார்.  பிடிபட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“விஜய் பயந்து போய்ட்டா என்ன பண்ண முடியும்” - சீமான் கேள்வி

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Seeman spoke about his political journey with Vijay

 

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாள் பெருவிழா நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டம். அது பட்டயம் கிடையாது. இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்க வேண்டும். எதார்த்தம் அதுதானே. சரத்குமார் சொல்வது சரிதானே. ரஜினிகாந்த் கூட ஆமாம் என்று தான் சொல்கிறார். அதை ரஜினிகாந்தே ஒத்துக்கொள்கிறார். 

 

2024 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா எனக் கேட்கின்றனர். அதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அன்று தான் யோசிக்கனும். விஜய்யின் ரசிகர்களை கவர்வதற்காக பேசுவதாகச் சொல்கிறார்கள். அது அப்படி இல்லை. சூர்யா, கார்த்திக் போன்றோருக்கு நெருக்கடி வரும்பொழுதும் பேசியுள்ளேன். 

 

நாங்க தனிச்சுப் போட்டியிட எப்பொழுதும் தயாராக உள்ளோம். பேரம் பேசுவோம். கூட்டணி பேசுவோம் என்ற சிந்தனை இல்லை. வந்தாலும் அதை அன்றைக்குத்தான் பேச வேண்டும். முதலில் விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டும். கொள்கையை முன்வைக்க வேண்டும். எனக்கு சில கொள்கைகள் உள்ளது. அது போல் அவருக்கும் கொள்கைகள் இருக்க வேண்டும். நான் அவரை அமர வைத்து விட்டு பிரபாகரன் வாழ்க எனச் சொல்லி விஜய் பயந்துவிட்டால் என்ன செய்வது.

 

நான் விஜய்யை சந்திக்கவில்லை. அவரது வீட்டு வாசலில் நடந்து போனேன். நானும் பாரதிராஜாவும் நடைபயணம் மேற்கொண்டுள்ள போது வாயிற்காவலரிடம் விஜய் உள்ளாரா எனக் கேட்பேன். இதுதான் நடந்தது” எனக் கூறினார்.