Skip to main content

வாடகையை உயர்த்தக்கோரி ஆகஸ்ட் 15 முதல் பால் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

ஆவின் பால் டேங்கர் லாரிகளுக்கான வாடகையை 40 சதவீதம் உயர்த்தி வழங்காவிட்டால் வரும் 15ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி அழகரசன் கூறியது:


தமிழகம் முழுவதும் 16 ஆவின் கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன. ஆவினில் தற்போது 50 பால் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் உள்ளோம். மொத்தம் 240 டேங்கர் லாரிகள் ஓடுகின்றன. 2016&2018ம் ஆண்டுக்கான ஒப்பந்தம் முடிந்து, ஆறு மாதத்திற்கு மேல் வண்டிகளை இயக்கியுள்ளோம். எங்களுக்கு டீசல், ஓட்டுநர் ஊதியம், டயர், வரி, காப்பீடு உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒப்பந்தம் முடிந்துள்ளதால் வண்டிகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை. வாடகை உயர்வு சம்பந்தமாக வரும் 15ம் தேதிக்குள் முடிவு தெரிய வேண்டும். அதற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்.

 

aavin milk tankers trucks strike from August 15

 


இப்போது, ஒரு கிலோமீட்டருக்கு 21 ரூபாயிலிருந்து 26 ரூபாய் வரை வாடகை வழங்கப்படுகிறது. அதை 40 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். அதாவது, 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும். டேங்கர் லாரி வாடகையை உயர்த்தும்படி கடந்த இரண்டு மாதங்களாக போராடி வருகிறோம். ஆவின் அதிகாரிகளிடம் மூன்று முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளோம். பதில் ஏதும் இல்லை. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்திருக்கிறோம்.

 

aavin milk tankers trucks strike from August 15

 


தமிழகத்தில் முழுவதும் தினமும் சென்னைக்கு 40 லட்சம் லிட்டர் பால், டேங்கர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. வேலைநிறுத்தம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டு மாதங்களாக போராடி வருகிறோம்.  எனவே, பால் டேங்கர் லாரிகளுக்கு வாடகையை உயர்த்துவது குறித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 15ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அழகரசன் கூறினார்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.