கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எ.சித்தூரில் ஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 வரை விவசாயிகளுக்கு தர வேண்டிய மாநில அரசின் பரிந்துரை விலை ரூ 50 கோடியை தரக்கோரி விவசாயிகள் பலமுறை ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் ஆலை நிர்வாகம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

s

Advertisment

ஆதலால் விவசாயிகள் தமிழக அரசிடம் தங்களுக்கு தர வேண்டிய நிலுவை பணத்தை பெற்ற தர வேண்டி கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தமிழக அரசின் வேளாண்மைத் துறை மற்றும் சர்க்கரை துறை ஆணையரின் பரிந்துரைப்படி, நீதிமன்றம் மூலமாக ஒரு கமிட்டி குழு அமைத்தது. அக்குழு கமிட்டியினர் ஜீன் 21 வரை விவசாயிகளுக்கு எவ்வளவு நிலுவை தொகை வர வேண்டும் என்று தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்ப கோரி விளம்பரப்படுத்தியது.

s

Advertisment

இதனை அறிந்த ஆலை நிர்வாகம் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநில அரசின் பரிந்துரை விலையின் அடிப்படையில் டன் ஒன்றுக்கு 350 ரூபாய் தருவதாக கூறியது. ஆனால் ஆலை நிர்வாகம் டன் ஒன்றுக்கு 40 ரூபாய் வீதம் 4 வருடத்திற்கு 160 தருகிறோம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆலை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அவ்வாறு கமிட்டி கூறியவுடன் பதிவு செய்யுங்கள் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டத்தில் இருந்து கலைந்தனர்.

s

தமிழக அரசு SAP பணத்தை பெற்று தர ஒரு கமிட்டி அமைத்துள்ள நிலையில், SAP பணத்தை முறைகேடாக பதிவு செய்ய சொல்லும் ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசின் உத்தரவை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நிர்வாகிகளின் அதிகார போக்கை கண்டித்தும் 100 -க்கு மேற்பட்ட விவசாயிகள் விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் கலைந்தனர்.