Skip to main content

’5 ஆண்டுகளில் தவறு செய்திருந்தால் மன்னிச்சிடுங்க’ –கெஞ்சிய அதிமுக வேட்பாளர்

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 


ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுகவில் செஞ்சி ஏழுமலை என்பவரை நிறுத்தியுள்ளனர். இவர் கடந்த 5 ஆண்டு காலம் இதே ஆரணி தொகுதி எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.


இவரை சொந்த கட்சியினர் மற்றும் கூட்டணியில உள்ள பாமக, தேமுதிக, பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் ஆரணி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எங்களை முறையாக அழைக்கவில்லையென பாமக, தேமுதிக வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தை புறக்கணித்துவிட்டது.

 

ar


இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் ஏழுமலை, கடந்த 5 ஆண்டு காலம் எம்.பியாக இருந்தேன். அப்போது நான் செய்த தவறுகள் ஏதாவது இருப்பின் என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் அப்படியொரு தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன், எனக்கு தேர்தல் வேலைப்பார்த்து வெற்றி பெற வையுங்கள் என கூடியிருந்த கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.


இதுப்பற்றி நம்மிடம் பேசிய அதிமுகவினர்,  இவர் எம்.பியா இருந்தாருன்னு இவர் சொன்னாதான் மக்களுக்கே தெரியும். அந்தளவுக்கு தான் இவருக்கும் தொகுதி மக்களுக்கும் தொடர்பிருந்தது. செஞ்சி, செய்யார் இந்த இரண்டு தொகுதியில் தான் இவரை எப்பவாவது பார்க்க முடியும். மத்தப்படி எந்த அரசு நிகழ்ச்சி, கட்சிக்காரன் வீட்டு விசேஷம், துக்கம் எதுக்கும் வறமாட்டார். இவரை வேட்பாளரா அறிவிச்சதுக்கு பதில் நாங்க, இந்த தொகுதியில நிக்கலன்னே சொல்லிட்டு போயிருக்கலாம். இவரை தொகுதிக்குள்ள அழைச்சிட்டுப் போனாளே மக்கள் விரட்டுவாங்க, என்ன செய்யறதுன்னே தெரியல என்றார்கள்

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

சிறுமிக்கு பாலியல் தொல்லை; கஞ்சா இளைஞருக்கு தர்மஅடி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
incident in aarani

அண்மையில் புதுச்சேரியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட முயன்று கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இதே போன்று கஞ்சா இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தகவல் வெளியான நிலையில் இளைஞரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற அந்த இளைஞர் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு கஞ்சா போதையில் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை அறிந்த அந்தபகுதி மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து கஞ்சா இளைஞர் இளங்கோவிடம் விசாரணை செய்த போலீசார் விசாரணையின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆரணியில் நிகழ்ந்த இந்த சம்பவம்  அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.