Skip to main content

ஆதாரைக் காட்டு... அஞ்சலி செலுத்து... துப்பாக்கிச்சூடு 2- ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020


 

AADHAR CARD THOOTHUKUDI STERLITE PEOPLES INCIDENT SECOND TEAR


இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாள்! 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலம், நீர், காற்று ஆகியவனற்றில் மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுங்கள் என குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என குடும்பத்துடன் திருவிழாவிற்கு செல்வது போல் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள்.
 


நடந்தது என்னவோ.?! வாயில் சுடப்பட்டும், தலையில், நெஞ்சில் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் 12 நபர்கள், காவல்துறையினரால் அடித்து உதைக்கப்ப்ட்டு இறந்தவர்கள் 3 நபர்கள், செய்துங்கநல்லூரில் பேருந்தில் கொளுத்தப்பட்டவர் ஒருவர் என நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்காகக் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 16 நபர்கள். அவர்களுக்காக இன்று நினைவேந்தலை செலுத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள். கூட்டம் கூடிவிடக்கூடாது, மீண்டும் ஒற்றுமையாக கை கோர்த்துவிடக் கூடாது என்பதற்காக இன்றும் கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகின்றது மாவட்ட காவல்துறை. அஞ்சலி செலுத்த வருபவர்களின் ஆதார் எண்ணைக் கேட்பது தான் அடக்குமுறையின் உச்சம் என்கின்றனர் மக்கள்.

 

AADHAR CARD THOOTHUKUDI STERLITE PEOPLES INCIDENT SECOND TEAR


நினைவோடு கலந்த வலிகள், உணர்வோடு கலந்த உயிரிழப்புகள் ஏதும் எளிதில் மறைவதில்லை என்பதற்கேற்ப ஆண்டுகள் இரண்டாகினாலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களும், துப்பாக்கிச் சூடு உயிரிழப்புகளின் சுவடுகளும் இன்னும் தூத்துக்குடியில் ஆறாத ரணமாகவே உள்ளது. பல ஆண்டுகால போராட்டம், பல நூறு தடைகள், பல உயிரிழப்புகள் என எல்லாவற்றையும் தாங்கி நின்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான விவகாரம் தற்போது நீர் விட்டு அணைக்கப்பட்ட தீ கனல்களில் கசியும் புகையைப் போல் கசிந்திட தொடங்கி உள்ளது.


வழக்கு விசாரணைகளை காரணம் காட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மறுத்து வந்த நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் அனுமதி தரவில்லை. 

 

AADHAR CARD THOOTHUKUDI STERLITE PEOPLES INCIDENT SECOND TEAR


ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான காவல்துறையும் பொது வெளியில் ஒன்று சேரக்கூடாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினருக்கு சம்மனை அனுப்பி வைத்து எச்சரிக்க ஆரம்பித்தது. மடத்தூர் பகுதியில் நினைவேந்தல் பேனரை அப்புறப்படுத்தி, பேனர் வைத்தவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது. எனினும், இதனைப் பொருட்படுத்தாது இன்றைய தினத்தில் தூத்துக்குடி மக்களுக்காக தங்களது இன்னுயிரைக் கொடுத்த ஈகியர்களுக்கு மாநகரிலுள்ள பண்டாரம்பட்டி, மடத்தூர், குமாரரெட்டியாபுரம், தோமையா நகர், இனிகோ நகர், லயன்ஸ் டோன், புதுத்தெரு, சில்வர்புரம் உள்ளிட்ட இடங்களிலும் மறைந்த ஈகியரை நினைவு கூறும் விதமாக, முகத்தில் கறுப்பு வண்ண முகக்கவசம் அணிந்தும், மெழுகுவர்த்தியும் அஞ்சலியை பெரும்பாலானோர் நினைவஞ்சலி செலுத்த, உயிரிழந்த ஈகியரின் குடும்பத்தார்களோ தங்களது உயிர் உறங்கும் கல்லறையில் அஞ்சலி செலுத்த, குடும்பத்தினர் தவிர கல்லறைக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களை அந்தப் பகுதி சாலையிலேயே தடுத்து நிறுத்தி அவர்களிடம் ஆதார் எண்ணைக் கேட்டு, அதனை வாங்கிய பின்னரே நினைவஞ்சலிக்கு அனுமதிக்கின்றனர். 

எனினும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் மக்கள் இன்று (22/05/2020) மாலை 07.00 மணியளவில் அவரவர் வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.