Skip to main content

மாசடைந்த காற்றை சுவாசிக்கும் உலகத்தின் 95% மக்களும், சென்னை நகரின் விரிவாக்க திட்டமும்

Published on 21/04/2018 | Edited on 21/04/2018

 

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் (சில கண்ணிற்கு புலப்படாத சின்ன உயிரினங்கள் தவிர) உயிர்வாழ்தலுக்கு அடிப்படை தேவை ஆக்சிஜென். ஆக்சிஜென் கிடைப்பது நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம், இதற்கு அடுத்த அடிப்படை ஆதாரம் தண்ணீர். சுவாசிக்கும் காற்றும் அருந்தும் தண்ணீரும் நன்றாக இருந்தால்தான் நல்ல சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும், இவை இரண்டும் மாசடைந்தால் முதலுக்கே மோசம்தான் என்கிறது பூவுலகின் நண்பர்கள் குழு.

அக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: உலக சுகாதாரத்தின் தரம் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்யும் "சுகாதார விளைவுகள் ஆய்வு நிறுவனம்" (health effects institute ) சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கொஞ்சம் "அதிர்ச்சி ரகம்தான்". உலகத்திலுள்ள 95 சதவீத மக்கள் மாசடைந்த காற்றைத்தான் சுவாசித்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை. உலக சுகாதார நிறுவனம் (world health organisation) நிர்ணயித்துள்ள அளவுகளுக்கு மேலாக உள்ளது மாசின் அளவு என்பதை அந்த அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். புகைபிடித்தல், ரத்தக்கொதிப்பு, உணவு பழக்கங்கள் இவற்றிற்கு பிறகு அதிகமாக மக்களை கொல்லக்கூடியதாக மாறியுள்ளது "காற்று மாசு". கடந்த ஆண்டு மட்டும் 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளார்கள் என்றும் அதில் சரிபாதிக்கும் மேல் உயிரிழந்தவர்கள் இந்தியர்களும் சீனர்களும்தான் என்கிறது அறிக்கை. காற்றுமாசுபாட்டால் பக்கவாதம், மாரடைப்பு, நுரைஈரல் புற்று மற்றும் நாள்பட்ட நுரைஈரல் நோய்கள் அதிகமாகி இருப்பதாகவும் சொல்கிறது ஆய்வு.

மேலும் மாசடைந்த நாடுகளுக்கும் மாசடையாத நாடுகளுக்கும் இடையேயான அளவுகள் மிகவும் அதிகமாகிக்கொண்டிருப்பதாக சொல்கிறார் அந்த நிறுவனத்தின் பாப்.அனைத்து வளர்ந்த நாடுகளும் காற்றை மாசுபடுத்தாத தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்த தொடங்விட்டன, ஆனால் வளரும் நாடுகள் "பொருளாதார முன்னேற்றம்" என்ற சாக்கை வைத்துக்கொண்டு இன்னமும் அதிகமாக மாசுபடுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இடையில் இருந்த "காற்றுமாசு இடைவெளி" 1990களில் 6 மடங்காக இருந்து இன்றைக்கு பதினோரு மடங்காக உயர்ந்துள்ளது கவலையளிக்கக்கூடிய விஷயம்தான்.

பாப் மேலும், இன்னமும் அதிகதூரம் செல்லவேண்டி இருந்தாலும் நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயங்கள் சில தென்படுகின்றன என்கிறார். காற்றுமாசை குறைப்பதில் சீனா அதிதீவிரமாக முன்னேறி வருவதையும், உலகத்தில் அனல் மின்நிலையங்களுக்கு மிகவும் அதிகமான தரக்கட்டுப்பாடுகளை சீனா தான் விதித்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இந்தியா சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அதில் போதாமை அதிகம் உள்ளது. தனிநபர் போக்குவரத்து இந்தியாவில் அதிகரித்து வருவதும் அதில் டீசலின் பயன்பாடு அதிகளவில் இருப்பதும் பிரச்சனையே.

உலகத்தில் நகரங்களின் பெருக்கமே காற்றுமாசிற்கு முக்கியமான காரணம் என்றும், அதிக மக்கள் நகரங்களை நோக்கி நகர்வதால் இந்த மாசு அதிகரிப்பதாகும் சொல்கிறது அந்த அறிக்கை.

இந்த பின்னணியில் சென்னையை "மகா நகரமாக்கும்" அரசின் முடிவு நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில், "வந்தால் பார்த்துக்கொள்ளலாம்" என்றிருந்தால் "வந்தால் பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது" என்று நாம் எப்போது உணரப்போகிறோம்?

(கீழே உள்ள படத்தை பார்த்தால் இந்தியா எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்).

 

tamil nadu

 

சார்ந்த செய்திகள்

Next Story

போகி கொண்டாட்டம்; புகை மண்டலமாக மாறிய சென்னை

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Chennai turns into a smoke zone due to bhogi celebrations

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும்.  அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது. 

சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் அது மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும் கடும் புகையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.