சென்னை ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாநிலமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தலில் 95 சதவிகித இடங்களில் நாம் வெற்றிபெறுவோம்.நாங்குநேரி, விக்கிரவாண்டியில் எப்படி திட்டமிட்டு வெற்றி பெற்றோமோ அதேபோல் வெற்றிபெற வேண்டும். உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெற குழு அமைக்கப்படும். சிறந்த வேட்பாளர்களை தயார்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.