Skip to main content

ஒரே நாளில் 939 பேர் குணம்... சென்னையில் 6 ஆயிரத்தை தொட்டது கரோனா பாதிப்பு!!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

 939 people in one day ... 6000 touched in Chennai

 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,


இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 384 ஆக உள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் வேறு மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற  வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக இன்று 477 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ கடந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளாக தமிழகத்தில் காரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500 க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் கரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 332 பேருக்கு கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தற்போது சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 6278 ஆக உள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர்  கரோனாவால் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது 

 

 


இன்று ஒரே நாளில் கரோனாவிலிருந்து  939 பேர் குணம் அடைந்ததால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3,538 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மருத்துவமனையில் 6,970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 61 கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் 31 நாட்களாக யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை, அதேபோல் திருப்பூரில் 15  நாட்களாகவும், கோவையில் 13 நாட்களாகவும் யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. சேலம், நாமக்கல்லில்  10  நாட்களாகவும்,   நீலகிரியில் 7  நாட்களாகவும் யாருக்கும் கரோனா  உறுதி செய்யப்படவில்லை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.