Skip to main content

சித்தனாதன், கந்தவிலாஸ் நிறுவனங்களில் 93 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு; 2.2 கோடி ரொக்கம், 56 கிலோ தங்கமும் பறிமுதல்!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

பழனி மலை அடிவாரத்தில் உள்ள பிரபல பஞ்சாமிதம் விற்பனை செய்யும் கடைகளான சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் கடைகளில் மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் 50 பேர் சோதனையில் ஈடுபட்டனர். சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் கடையின் உரிமையாளாகள் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்க்கு புகார்கள் சென்றதை அடுத்து கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த இரண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்கானித்துவந்துள்ளனர்.  

 

93 crores tax evasion in Siddhanathan and Kandhavilas companies; 2,2 crores in cash, 56 kg of gold seized

 

இந்தநிலையில் வருமான வரித்துறை உயர்அதிகாரி சாஜி கிருஸ்டோபர் தலைமையில் திடிரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். பழனிமலை அடிவாரத்தில் உள்ள சித்தனாதன் பஞ்சாமிர்த கடை, வீடு, தோட்டம், குடோன், தொழிற்சாலைகள் என இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் 30 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூன்று நாட்களாக சோதனை நடத்தினர். சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகளே அதிர்ச்சியடையும் அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளது.

கைப்பற்றிய நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சித்தனாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளராக பதிவு செய்யப்பட்டுள்ள அசோக்குமாரிடமும் குடும்ப உறுப்பினர்களான சிவனேசன், தனசேகரன், பழனிவேல், ரவி, செந்தில் என 100 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றுள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள கடையை பிரதானமாக கொண்டு சித்தநாதன் குடும்பத்தினர்கள் பஞ்சாமிர்த விற்பனை செய்யும் தொழிலை நடத்திவந்துள்ளனர். கடையில் நாள்தோறும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் அளவிற்கும், திருவிழா காலங்களில் நாள் ஒன்று 50 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும் நிலையில், விற்பனையை மறைத்து குறைந்த அளவிலான தொகைக்கு வியாபாரம் நடைபெற்றது போன்றும், லாபத்தை குறைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கணக்கு காட்டிவந்தது வருமான வரித்துறை அதிகாரிகளால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

93 crores tax evasion in Siddhanathan and Kandhavilas companies; 2,2 crores in cash, 56 kg of gold seized

 

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகையை வரி ஏய்ப்பு செய்து எந்த வகையில் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மற்றோருபுறம் இவர்களுக்கு பழனி மற்றும் வெளியூர்களில் உள்ள சொத்துக்களின் மதிப்பு என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி பல்வேறு அவணங்களை கண்டுபிடித்துள்ளனர். இதேபோன்று கந்தவிலாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் மூன்று தினங்களாக தீவிரமாக விசாரணை நடைபெற்றது. கந்தவிலாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது வருமானத்தை குறைத்து காட்டி வரி செலுத்திவிட்டு சொத்துக்களை வாங்கியுள்ளதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.  

 

93 crores tax evasion in Siddhanathan and Kandhavilas companies; 2,2 crores in cash, 56 kg of gold seized

 

இந்தநிலையில் இவர்களின் சொத்திற்கும் இவர்கள் அரசுக்கு செலுத்திய வருமானத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால் கந்தவிலாஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதிசெய்தனர். மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில் சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் நிறுவனம் 93.56கோடிக்கு  வரி ஏய்ப்பு செய்துள்ளது. அதோடு 56 கிலோ அளவில் கணக்கில் வராத தங்கநகைகள் மற்றும்  2.2 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத ரொக்க பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையை முடித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடித்துக்கொண்டு ஆவணங்கள், தங்கநகை மற்றும் பணத்தை கைப்பற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

அடுத்த கட்டமாக சித்தனாதன் நிறுவனத்தின் உரிமையாளர்கள், கந்தவிலாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு  நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்த உள்ளனர். பழனியில் பஞ்சாமிர்த விற்பனையில் கொடிகட்டி பறந்த இரண்டு பெரிய நிறவனங்களான சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளது பழனியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.