மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90 சதவிகிதம் பேர் வெளிமாநிலத்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 90% of Madurai Railway is external state

Advertisment

நாடுமுழுவதும் 62,907 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டிதேர்வுகடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற்றதது. சென்னை உட்பட 16 மண்டலங்களில்நடைபெற்ற இந்த தேர்வில்இருப்புப்பாதை தொடர்பான பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரை கோட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல்தெரியவந்துள்ளது.

Advertisment

மதுரை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் தமிழகத்தை சேர்ந்த 10 க்கும் குறைவானவர்களுக்கே இடம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள ரயில்வேதுறைதமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதே இதற்கு காரணம்என தெரிவித்துள்ளது.