9 people arrested incident

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் இருவேறு இடங்களில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், 4.17 கிலோ கிராம் கொண்ட மெத்தபட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 9 பேரில் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பதும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் சென்னை ராயப்பேட்டை அருகே போதைப் பொருள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

அதே சமயம் சென்னை சென்ட்ரல் வந்த பூரி வாராந்திர விரைவு வண்டியில் இருந்த பயணிகளிடம் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். ரயில் பயணிகளைச் சோதனை செய்த போது ஒடிசாவைச் சேர்ந்த சரோஜினி, நளினி என்ற இரு பெண்களைக் கைது செய்துள்ளனர்.