9  fishermen arrested!

நாகையை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Advertisment

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் அவ்வப்பொழுது தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகள், மீன்பிடி பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கை திரிகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.