Skip to main content

திருச்சி என்.செல்வேந்திரன் 80 வது பிறந்தநாள் விழா!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 

திருச்சி செல்வேந்திரன், சொல்வேந்தர் என்று அழைக்கப்படும் இவர், திராவிடர் விடுதலைக்கழகத்தில் தனது அரசியல் வாழ்க்கையை கிளைப்பொறுப்பாளராக ஆரமித்து, நகரச்செயலாளர், மாவட்ட துணை செயலாளர், தலைமைக்கழக பிரச்சார செயலாளர் என அடுத்தடுத்து பதவிகளை அலங்கரித்தவர், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெளியீட்டுச் செயலாளராக உள்ளார். 

திருச்சி உறையூர் சொந்தவூராக கொண்டவர் அவருடைய அப்பா நீலமேகம், அம்மா சிவகாமி, பரம்பரை பரம்பரையாக குடும்பத்துக்கு ஏகப்பட்ட நிலத்திற்கு சொந்தக்காரர்கள் செல்வேந்திரன் தாத்தா திருச்சி நகராட்சியில் முக்கிய பொறுப்பிலும், ஊர் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தவர் என்பதால் ஊரில் செல்வாக்கு மிக்க குடும்பம்,.பிறகு நீதிகட்சியில் இணைந்து பணியாற்றினார், இந்த பின்புலம் என். செல்வேந்திரனை பெரியார் கொள்கையுடன் இணைத்தது.

திருச்சி நேஷனல் கல்லூரியில் இன்டர் மீடியன் கோர்ஸ் படித்தார் அவர் படிக்கும் காலத்தில் எல்லாரும் பேசுவதை விட நாம் வித்தியாசமாக பேசவேண்டும் என யோசித்து ஆரம்பத்தில் வகுப்பறைகளில் பேசி பேசிப் பழகினார் பின் . கல்லூரி காலங்களுக்கு பிறகு அவருடைய ஏரியாவில் திருவிக மன்றம் ஒன்று இயங்கி வந்தது. அதில் வாராவாரம் அரசியல், இலக்கியம் சார்ந்த விவாதங்கள், சொற்பொழிவுகளில் பேசியிக்கிறார். அந்த பேச்சு தான் அவரை கால ஓட்டத்தில் பெரியார், கலைஞர், சின்னக்குத்தூசி, சோலை, ஜவகர் பெரிய இலக்கிய நட்பு வட்டத்திற்கு கொண்டு சென்றது. 

கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாத நிலையில் மேடை பேச்சுகளை தவிர்த்து விட்டு எழுத்துக்கு ஓய்வு கொடுத்து வீட்டிலே ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில் என். செல்வேந்திரனுக்கு இன்று 22.08.2019 அவருக்கு 80 வது பிறந்த நாள் விழா உறையூரில் காமாச்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. 

பிறந்த நாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் திருச்சி தினமலர் பதிப்பு இணை ஆசிரியர் ராமசுப்பு, ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகள் சொல்லி ஆசீர் பெற்றனர். காலையிலே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவருடைய வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து ஆசீர் பெற்றார். 

கோவை ராமகிருஷ்ணன், பெரியார் சரவணன், கரூர் ராஜேந்திரன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. குளித்தலை மாணிக்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் சேரன், வெல்லமண்டி சோமு, திமுக கே.என்.சேகரன், முத்திரையர் சங்க தலைவர் ஆர். விஸ்வநாதன், மற்றும் வெள்ளார் சங்கத்தின் ஹரி, மற்றும் திராவிடர் கட்சியினர். உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி ஆசி பெற்றனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகன் எழில் தலைமையில் அவர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.