ADVERTISEMENT

8 வழிச்சாலை கருத்துகேட்பு தொடக்கம் –நீதிமன்றத்தில் பொய் சொன்னதா மத்தியரசு ?

03:43 PM Sep 15, 2018 | raja@nakkheeran.in


சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக மற்றும் தனி நபர்கள் சிலர் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, திட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என பதில் தந்தது. நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் சொல்லியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

ADVERTISEMENT


திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக செல்லவுள்ள எட்டுவழிச்சாலையை எதிர்த்து செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், சேத்பட், வந்தவாசி, செய்யார் வட்டாரங்களை சேர்ந்த 847 விவசாயிகள் எட்டுவழிச்சாலைக்காக எங்களது நிலங்களை வழங்க முடியாது என எதிர்ப்பு மனுக்களை தந்துள்ளனர்.

ADVERTISEMENT


எதிர்ப்பு மனு தந்த வந்தவாசி தாலுக்காவை சேர்ந்த 53 விவசாயிகளுக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 14ந்தேதி வந்தாசி தாலுக்கா அலுவலகத்துக்கு 38 விவசாயிகள் வந்தனர். அவர்களிடம் தனி வருவாய் கோட்டாச்சியர் வெற்றிவேல் தனித்தனியாக கருத்துக்கேட்டார். வந்தவர்கள் அனைவரும் எங்களால் நிலத்தை வழங்க முடியாது என எதிர்ப்பு கருத்தை பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து வரும் 20ந்தேதி செய்யாரிலும், 24ந்தேதி திருவண்ணாமலையிலும், 25ந்தேதி போளுரிலும், 26ந்தேதி செங்கத்திலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளர் அதிகாரிகள்.


நிலங்களை கையகப்படுத்த தடையில்லை, மற்றியவற்றுக்கு இடைக்கால தடைச்சொன்ன உயர்நீதிமன்றத்திடம், சிலதினங்களுக்கு மத்தியரசு, இந்த திட்டத்தில் மாற்றம் செய்வதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவித்தது. அப்படியிருக்கும் நிலையில் பாதிக்கப்படும் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள் அதிகாரிகள்.


மத்தியரசு நீதிமன்றத்தில், திட்டத்தில் மாற்றம் செய்வதால் இத்திட்டத்தை நிறுத்திவைத்துள்ளோம் என்றது. அவர்கள் நிறுத்திவைத்துள்ளோம் என்கிறார்கள். அதை மீறி தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அதிகாரிகள் கருத்துக்கேட்கிறார்கள். அப்படியாயின் மத்தியரசின் பேச்சை மீறி மாநில அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்களா என கேள்வி எழுப்புகிறார்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடும் அமைப்பினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT