Skip to main content

காலாவதியான உணவு தயாரித்த 8 அசைவ உணவகங்களுக்கு அபராதம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 8 non-veg hotel shops fined for serving expired food

 

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம், மாலை, இரவு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உணவகத்தில் உணவு சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். மேலும் அந்தத் தனியார் உணவகத்தில் உணவருந்திய அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அசைவ ஹோட்டல்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாநகராட்சி, பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் மேற்கொண்ட சோதனைகள், தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 30 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி தங்க விக்னேஷ் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில் உள்ள அசைவ ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 15 ஹோட்டல்களும், சத்தியமங்கலத்தில் 8 ஹோட்டல்களும் பெருந்துறையில் 15 ஹோட்டல்கள் என 38 ஹோட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சிக்கனை சமைத்து தயார் செய்துவிட்டால் 5 முதல் 8 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஆனால் இவர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வைத்துள்ளனர். அவித்த முட்டை மற்றும் ஏற்கனவே சமைத்த சிக்கன்களை ப்ரிட்ஜுக்குள் வைக்கக்கூடாது எனப் பலமுறை தெரிவித்துள்ளோம். இதில் 30 கிலோ இறைச்சிகளை அழித்துள்ளோம். 8 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 8 கடைகளுக்கு தலா ரூ. 2000 வீதம் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம். பொதுமக்கள், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை 94440 42322 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இன்று மாலை 2 -வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது.''  என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.