மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

ோே

2022ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. தற்போது கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சில தினங்களாக செய்திகள் வெளியாகிவந்தது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது தொடர்பாக முக்கிய தகவலைக் கூறினார்.

அதன்படி வரும் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பேரவைத் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாகவும், காகிதம் இன்றி அவை நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மூலமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆளுநர் உரை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

Legislative Assembly speaker appavu st george kottai
இதையும் படியுங்கள்
Subscribe