8 fishermen arrested

Advertisment

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் உடனடியாக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு தற்போது அவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.