15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்!

75TH INDEPENDENCE DAY POLICE OFFICERS SPECIAL AWARDS

காவல்துறையில் சீரியப் பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறந்த பொதுச்சேவைக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, காவல் ஆய்வாளர் அம்பேத்கர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சிவராமன், பழனியாண்டி, குமார் ஆகியோருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இதேபோல், புலன் விசாரணை பணியில் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துணை ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் எனத் தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe