Skip to main content

அசால்ட்டாக எடுத்து வந்த 75 சவரன்! அதிரடி காட்டிய பறக்கும் படை! 

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

75 pawn gold sized by police near viluppuram

 

விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம், ஆகிய நகராட்சிகளுக்கும் வளவனூர், செஞ்சி, அனந்தபுரம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி, மரக்காணம், பேரூராட்சிக்கும் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வினியோகிப்பதை தடுக்கவும் மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பறக்கும் படைகள் தினசரி 3 ஷிப்டு முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வட்டாட்சியர் தலைமையில், சிறப்பு எஸ்.ஐ. மற்றும் போலீசார் குழுவாக இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் நேற்று விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பாலம் அருகே பறக்கும் படை தாசில்தார் சங்கரலிங்கம் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ. சின்னப்பன் மற்றும் போலீசார் பரமசிவம், ஷோபா ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி அவரிடம் சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து தங்கத்தினால் செய்யப்பட்ட ஏராளமான ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட ஆபரணநகைகள் இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது குமாரன் என்பது தெரியவந்தது. மேலும், அவர் கொண்டுவந்த அந்நகைகளுக்கான ஆவணங்களும் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. 

 

அதனால், அவரிடம் இருந்து அந்நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், நகராட்சி தேர்தல் அதிகாரியான சுரேந்திர ஷாவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஆபரணங்களில் ஜிமிக்கி கம்மல் 42, சிறிய கம்மல் எட்டு ஜோடி, தாலி சரடில் கோர்க்கப்படும் உருப்படிகள் 598 என மொத்தம் 75 சவரன் இருந்தது. இதன் மதிப்பு 27 லட்சம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட அந்த ஆபரணங்களை விழுப்புரத்தில் உள்ள அரசு கருவூலத்தில் அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேற்படி தங்க நகை ஆபரணங்கள் வியாபாரத்திற்காக நகை கடைக்கு கொண்டுசெல்லப்பட்டதா? வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக விநியோகம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.