மருத்துவப்படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டினை, தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் நிலையில், அதற்கான வழிமுறைகளையும் அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு சம்பந்தமாகச் சான்றிதழ் சரிபார்ப்புக்குக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு பெறும், அரசுப் பள்ளி மாணவர்கள் சான்றிதழைச் சரிபார்க்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடாகச்சான்றளிக்கும் மாணவர்களின் மருத்துவப் படிப்பு சீட் ரத்து செய்யப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.