நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைத்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் கட்டிடத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாநகராட்சிமேயர் பிரியா ராஜன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் ஆணையர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் என ஏராளமானோர்கலந்துகொண்டனர்.

Advertisment