சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. ஜூன் 19 முதல் 30 வரையிலான12 நாட்கள்முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுவரைசென்னையில் முகக் கவசம் அணியாமல் வெளியே சென்ற 73 ஆயிரம் பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 கோடியே 65 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வாகனத்தில் வெளியே சென்றவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.