Skip to main content

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஒரே நாளில் 70 மணமக்களுக்கு திருமணம்!! 

Published on 06/09/2020 | Edited on 06/09/2020
70 brides get married in one day at Devanatha Swamy Temple,

 

கடலூர் அருகிலுள்ளது திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் இந்த கோயிலில் திருமண முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோயிலில் வந்து திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் உள்ளது. இங்கு திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் வாழ்வில் குறைவின்றி பொருட்செல்வம் மக்கள் செல்வம் நோய் நொடியின்றி வாழ்கிறார்கள். தேவநாதசுவாமி அருளால் என்ற அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையால் இக்கோயிலில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

சிலநேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. திருமணத்திற்கு வரும் உற்றார், உறவினர்கள் திக்குமுக்காடி போவார்கள். அந்த அளவிற்கு திருமண நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படிப்பட்ட கோவிலில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கரோனா பரவல் காரணமாக திருமணங்கள் நடைபெற வில்லை, பக்தர்கள் தரிசனம் இல்லை. இதனால் கோவில் திறக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளைஅறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பல்வேறு விதிமுறைகள் படிபக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் இக்கோவில் அருகில் உள்ள மண்டபங்களில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் அனுமதிக்கப்பட்டாலும் கோவிலுக்குள் திருமணம் நடைபெற அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் கோவிலுக்கு வெளியில் உள்ள மண்டபங்களில் திருமணங்களை செய்த திருமண ஜோடிகள் பின்னர் கோவிலுக்கு வெளியே நின்று தேவநாத சுவாமி தரிசனம் செய்தனர் .கோவிலுக்கு வெளியில் சென்று சாமி தரிசனம் செய்யும் போதும் கூட அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவில் முன்பு நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 மாதங்களாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை குறைந்து களை இழந்து காணப்பட்டது. கோவில் வளாகம் தற்போது மீண்டும் பக்தர்கள் வருகையாலும் திருமணங்கள் நடைபெறுவதாலும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியுள்ளது. தேவநாத சுவாமியின் அருளால் இங்கு வரும் பக்தர்களும் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களும் குறை இன்றிவளமோடு வாழ்வார்கள் என்று வாழ்த்துகிறார்கள் கோயில் அர்ச்சகர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.