Skip to main content

மான் வேட்டை; துப்பாக்கியுடன் 7 பேர் கைது

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

7 people arrested for deer hunting

 

வனவிலங்கு சட்டப்படி மான்களை வேட்டையாடவும் கூடாது. அதன் கறி கைப்பற்றப்பட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆனால், இதனையெல்லாம் சிலர் கண்டுகொள்ளாமல் மான்களை வேட்டையாடி வருகின்றனர். 

 

இந்த நிலையில், நேற்று அதிகாலை நெல்லை மாவட்டத்தின் பாப்பாக்குடி எஸ்.ஐ. ஆபிரகாம், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையிலிருந்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டிருக்கிறார்கள். அப்போது காரினுள்ளே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மான், 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்தி, இரவு நேரத்தில் பயன்படுத்தப்படுகிற ஹெட்லைட் உள்ளிட்டவை இருப்பதைக் கண்டு காரில் இருந்தவர்களை ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்திருக்கிறார்கள். இதில் அவர்கள் பாப்பாக்குடி அருகேயுள்ள பனையங்குறிச்சி பகுதியில் துப்பாக்கியால் மானை வேட்டையாடியது தெரியவந்தது. 

 

இதுகுறித்து போலீசார் நெல்லை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, வனச்சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத்துறையினர் காவல்நிவையத்திற்கு வந்து வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கார், இறந்த மான் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மானை வேட்டையாடியதாக கல்லூரைச் சேர்ந்த ராமையா, சேரன்மகாதேவி குமார், ரமேஷ், ஊத்துமலை கிருஷ்ணா, உசிலம்பட்டியின் யோஸ்வராஜ், வாடிப்பட்டி போவாஸ், கோபிசெட்டிபாளையம் பிரகாஷ் ஆகிய 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பல ஆண்டுகளாக கறிக்காக மான்களை வேட்டையாடியது தெரியவந்திருக்கிறது. மேலும் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். மேலும் தகவலறிய பிடிபட்ட 7 பேரையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர் வனத்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.