Skip to main content

7 மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்!

Published on 01/07/2018 | Edited on 01/07/2018
smk


ஏழு மாவட்ட திமுக நிர்வாகிகளை அதிரடியாக நீக்கம் செய்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

’’தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

 

மதுரை மாநகர் மாவட்டம் பழங்காநத்தம் பகுதி கழக செயலாளர் ஓச்சுபாலு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தவமணியும், நெல்பேட்டை பகுதி 52-வது வட்டக் கழக செயலாளர் டி.பாலா (எ) பாலசுப்பிரமணியன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.ரமேஷ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.குமரன் பொறுப்பாளராகவும், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் துரை புகழேந்தி விடுவிக்கப்பட்டு எஸ்.கிருஷ்ண மூர்த்தி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் உக்கிரபாண்டி விடுவிக்கப்பட்டு சுதாகரன் பொறுப்பாளராகவும், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மூக்கையா விடுவிக்கப்பட்டு ஜெயச்சந்திரன் பொறுப்பாளராகவும், திருமங்கலம் நகர செயலாளர் டி.நாகராஜன் விடுவிக்கப்பட்டு சி.முருகன் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.போஸ் விடுவிக்கப்பட்டு எல்.எம்.பாண்டியன் பொறுப்பாளராகவும், தேனி ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி விடுவிக்கப்பட்டு எம்.சக்கரவர்த்தி பொறுப்பாளராகவும், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் விடுவிக்கப்பட்டு ஆர்.அண்ணாதுரை பொறுப்பாளராகவும், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் குமரன் விடுவிக்கப்பட்டு அணைப்பட்டி முருகேசன் பொறுப்பாளராகவும், கம்பம் நகர செயலாளர் கிங்.செல்லப்பாண்டி விடுவிக்கப்பட்டு துரை நெப்போலியன் பொறுப்பாளராகவும், பெரியகுளம் நகர பொறுப்பாளர் அபுதா கீர் விடுவிக்கப்பட்டு எஸ்.பி.முரளி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

காளையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி என்ற சத்தியநாதன் விடுவிக்கப்பட்டு ஆர். எம்.கென்னடி பொறுப்பாளராகவும், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.முத்துராமலிங்கம் விடுவிக்கப்பட்டு சுப. சின்னத்துரை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.சி. கனகராஜன் விடுவிக்கப்பட்டு ஜீவானந்தம் பொறுப்பாளராகவும், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம் விடுவிக்கப்பட்டு தி.சக்தி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மதுரை மாநகர் மாவட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அதன்படி மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு என செயல்பட்டு வரும் 2 மாவட்டங்களும் இனி மதுரை மாநகர் மாவட்டம் என ஒரே அமைப்பாக செயல்படும்.  இவ்வாறு அமையும் மதுரை மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கோ.தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக வேலுசாமி, குழந்தைவேலு, எஸ்ஸார் கோபி, சின்னம்மாள், பொன்.மு.சேதுராமலிங்கம், ஜவஹர், ஜெயராமன், தமிழரசி, டாக்டர் சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தேனிமாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் கம்பம் ராமகிருஷ்னன் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப.த.தியாகரன் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் கே.முத்து ராமலிங்கம் புதிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ராதாபுரம் ஒன்றிய செயலாளர் கோ.கேசவன் விடுவிக்கப்பட்டு வி.எஸ்.ஆர் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டு முத்துப்பாண்டி என்ற பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

நான்குநேரி ஒன்றிய செயலாளர் என்.வானுமா மலை விடுவிக்கப்பட்டு ஆர்.எஸ்.சுடலைகண்ணு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சிவகுருநாதன் விடுவிக்கப்பட்டு சிவனுபாண்டி என்ற பரணி சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குருவி குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சேர்மதுரை விடுவிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜா விடுவிக்கப்பட்டு விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சூட்டுசாமி விடுவிக்கப்பட்டு அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சங்கரன்கோயில் நகர செயலாளர் சங்கரன் விடுவிக்கப்பட்டு ராஜதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் மணி விடுவிக்கப்பட்டு பி.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  விளாத்திக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேலாயுத பெருமாள் விடுவிக்கப்பட்டு ஜெயக்குமார் பொறுப்பாளராகவும், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் விடுவிக்கப்பட்டு கருப்பசாமி பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

 

ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.வைகுண்டம் விடுவிக்கப்பட்டு கொம்பையா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  குளச்சல் நகர செயலாளர் ஆ.நசீர் விடுவிக்கப்பட்டு அப்துல்ரகீம் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
திருவட்டார் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு ஜான் பிரைட் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.’’

சார்ந்த செய்திகள்