Skip to main content

கிருஷ்ணகிரியில் உரிமமின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 7 பேர் கைது! 

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

7 arrested for possessing unlicensed firearms in Krishnagiri

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் உரிமம் பெறாமல் பலர் எஸ்.பி.எம்.எல். ரக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக மாவட்ட எஸ்பிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா, கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சுப்ரமணி உள்ளிட்ட காவலர்கள் கெலமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் வீடு வீடாக விசாரணை நடத்தினர்.

 

காடுலக்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பா (45), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (47), பேவநத்தத்தைச் சேர்ந்த திம்மராயன் (42), இருளப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (37), உப்பு பள்ளத்தைச் சேர்ந்த சேட்டு மகன் முரளி (25), யு.புரம் கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா (50), சங்கரப்பா (60) ஆகியோர் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பது தெரியவந்தது.

 

அவர்களிடமிருந்து தலா ஒரு நாட்டுத்துப்பாக்கி வீதம் மொத்தம் 7 எஸ்.பி.எம்.எல். ரக துப்பாக்கிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன், அவர்களையும் கைது செய்தனர். கெலமங்கலத்தில் பூஜை பொருள் வியாபாரம் செய்துவரும் சீனிவாசன் (45) என்பவர்தான், கைதான 7 பேருக்கும் துப்பாக்கிக்குத் தேவையான வெடிமருந்து பொருட்கள், கரி மருந்து, பால்ரஸ் குண்டுகள் ஆகியவற்றை சப்ளை செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்டவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறியுள்ளனர். அவர்களுக்கு வெடி மருந்துகளை விற்ற சீனிவாசனையும் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.