Skip to main content

பிச்சாவரம் கடலில் 672 கடல் ஆமை குஞ்சுகள் விடப்பட்டன!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

672 sea turtle chicks released in Pichavaram sea

 

கடந்த சில வருடங்களாக பிச்சாவரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் வனத்துறை மூலம் செயற்கை ஆமை முட்டை பொறிப்பகம் அமைக்கப்பட்டது. கடலாமை (ஆலிவ் ரிட்லி) முட்டைகள் சேகரிப்பு செய்து பாதுகாப்பாக பொறிப்பகத்தில் வைத்து முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வந்தவுடன் கடலில் விடப்படும். இந்தாண்டு பிச்சாவரம் வனச்சரகம் மூலம் 1,300க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரம் செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

 

இவற்றில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 672 ஆமை குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்ததையொட்டி, கடலூர் மாவட்ட வனச்சரக அலுவலர் செல்வம், அதனைக் கடலில் விட உத்தரவிட்டார். அதன்படி பிச்சாவரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், சரண்யா, அபிராமி, அலமேலு வனக்காவலர்கள் எழிலரசன் மற்றும் ஓட்டுநர் முத்துக்குமரன் வனச்சரகப் பணியாளர்கள் ஆமைகுஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டனர். ஆமை முட்டைகளை நேர்த்தியான முறையில் சேகரிப்பு செய்து பொறிப்பகத்தில் வைத்துப் பாதுகாத்து வருவதால், 95 சதவீதத்துக்கும் மேல் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவருகிறது. இந்த ஆமை குஞ்சுகள் கடலில் மீன் வளத்தை அழிக்கும் ஜெல்லி வகை மீன்களை அழித்து, கடலின் மீன் வளத்தைப் பாதுகாக்கிறது என்று வனச்சரகர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிச்சாவரத்தில் சுற்றுலாத் துறை ஆணையர் ஆய்வு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Inspection by the Commissioner of Tourism at Pichavaram

 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலாதளத்தை பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலாத்துறை ஆணையருமான காக்கர்ல உஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது அவர் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 14.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில் ஹோட்டல் தமிழ்நாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வகுமார், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளைரவீந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனுசாமி, பிச்சாவரம் படைக்கு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

பிச்சாவரம் சுற்றுலாத்தலம் மேம்படுத்தும் பணி; சுற்றுலாத் துறை ஆணையர் ஆய்வு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Commissioner of Tourism inspects the development of Pichavaram tourist site

 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா தலத்தை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.  இந்த பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலா துறை ஆணையருமான திருமதி காக்கர்ல உஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது அவர் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 14.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

 

இதனை தொடர்ந்து சிதம்பரத்தில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில் ஹோட்டல் தமிழ்நாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வக்குமார் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன்,  சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனிசாமி,  பிச்சாவரம் படைக்கு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.