Skip to main content

சென்னையில் 600 கிலோ கன்றுக்குட்டி இறைச்சிகள் பறிமுதல்!

Published on 11/03/2018 | Edited on 11/03/2018

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக, வெளிமாநிலங்களில் இருந்து பிரியாணி கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட கன்றுக்குட்டிகளின் இறைச்சிகள் சுமார் 600 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் கூவம் நதிக்கரை ஓரமாக சுகாதாரமற்ற முறையில் கேடு விளைவிக்கும் வகையில் ஆட்டிறைச்சிகள் வெட்டப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எழும்பூர் போலீசாருடன் அங்கு சென்ற சுகாதாரத்துறையினர், வெட்டி தயாராக வைக்கப்பட்டிருந்த இறைச்சியை ஆய்வு செய்தனர். அப்போது அவை ஆட்டிறைச்சிகள் அல்ல என்பதும் கன்றுக்குட்டிகளின் இறைச்சி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 600 கிலோ கறியை பறிமுதல் செய்த அதிகாரிகள், 9 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த இறைச்சி வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகளின் இறைச்சிகள் என்பதும், ஆட்டிறைச்சியைப் போல் இருப்பதற்காக எலும்புகள் இல்லாமல், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கன்றுக்குட்டிகளின் இறைச்சிகளை சென்னையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் வாங்கிச் சென்று, எஸ்ஸன்ஸ் கலந்து மட்டன் பிரியாணியாக சமைத்து விற்பதும் தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'5 பைசா ஆஃபர் பிரியாணி'-மக்கள் திரண்டதால் ஷட்டரை மூடிய கடைக்காரர் 

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 '5 paisa offer biryani'-shopkeeper closes shutters as crowd gathers

பெரும்பாலும் புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கும் பொழுது 10 ரூபாய்க்கு ஒரு பிரியாணி அல்லது ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற நூதன விளம்பரங்களைப் பார்த்திருப்போம். கடை திறக்கும் நாளிலேயே மக்கள் கூட்டம் கடையில் அலைமோத வேண்டும் எனக் கடையின் உரிமையாளர்கள் இந்த நூதன முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஆனால் தற்பொழுதெல்லாம் இதைவிட மேலும் நூதனமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பிரியாணி கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரூரில் 'திண்டுக்கல் பிரியாணி' என்ற புது பிரியாணி கடை திறக்கப்பட்டது. அறிமுக நாள் சலுகையாக ஒரு பைசா, 5 பைசா, பத்து பைசா உள்ளிட்ட செல்லாத நாணயங்களை கொண்டு வந்தால் பிரியாணி இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டது.

செல்லாத காசுகள் மக்களிடம் இல்லாமல் இருக்கலாம் என கடை நிர்வாகம் நினைத்ததோ என்னவோ இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் அடுத்த நாள் காலையிலேயே செல்லாத ஐந்து பைசா, பத்து பைசா காசுகளுடன் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த வரவேற்பை எதிர்பாராத பிரியாணி கடையினர் மக்கள் கூட்டத்தை கண்டதும் 50 பேருக்கு மட்டும் பிரியாணி டோக்கனை கொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கடையின் ஷட்டரை  மூடிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பிரியாணிக்கு காசா? - ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கிய கும்பல்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
After eating biryani, the gang beaten the hotel owner after refusing to pay

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில்  நேற்று மதியம்  மது போதையில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். பின்னர் பணம் தராமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் அந்த கும்பலிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உரிமையாளரைத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அந்த கும்பலைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்நிலையில் இரவு நேரத்தில் ஈரோடு மரப்பாலம் பகுதியில் அந்த 4 பேர் கொண்ட கும்பல் சுற்றித் திரிந்துள்ளது. இவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட பொதுமக்கள் அந்த கும்பலை தர்ம அடி கொடுத்து பிடித்தனர். 

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்த இருவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், புவனேஸ்வரன் எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் ஓட்டலில் தகராற்றில் ஈடுபட்டு தலைமறைவான சூர்யா மற்றும் மாதேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஈரோடு ஓட்டலில் மதுப் பிரியர்கள் தகராற்றில் ஈடுபட்டு வருவது தொடர்கதை ஆகி வருகிறது.