Advertisment

"உச்சவரம்பை நீக்கி விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்" - முதல்வர் அறிவிப்பு!

600 crore relief for farmers - Chief Minister's announcement

நிவர், புரெவிபுயல் காரணமாகபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் குறித்தஅறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிவெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் அண்மையில் பெய்தவடகிழக்குப்பருவமழையால் பல இடங்கள்பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து வீசியநிவர், புரெவிபுயல்கள்காரணமாக, பல்வேறு இடங்களில் வேளாண்பயிர்கள்நாசமாகின. இந்த இரண்டு புயலாலும் பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக் குழு ஆய்வுசெய்தது. நிவர் புயல் சேதத்தை தற்காலிமாகச் சீரமைக்க641 கோடியும்,நிரந்தரமாகசீர்செய்ய 3,100 கோடி எனவும் மொத்தம் 3,741 கோடி ரூபாய்,மத்திய அரசிடம் கோரப்பட்டது. அதேபோல், புரெவி புயல் பாதிப்புகளைநிரந்தரமாக சீர்செய்ய1,514 கோடிரூபாய்கோரப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில்பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 600 கோடிக்குஇடுபொருள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புயல் பேரிடரால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், இடுபொருள் நிவாரணம் வழங்க உச்சவரம்பில் தளர்வளிக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர்என்ற உச்சவரம்பைத்தளர்த்தி பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுமைக்கும்நிவாரணம் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி7-ஆம் தேதி முதல் விவசாயிகள் வங்கிக் கணக்கில்நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Farmers edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe