Skip to main content

6 டன் ரசாயனம் தடவிய மாம்பழங்கள்... அதிகாரிகளின் அதிரடி சோதனையில் அதிர்ச்சி!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

6 tons of chemically smeared mangoes confiscated ... Food safety officials take action!

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள பழ மார்க்கெட்டில்  உணவுத்துறை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் 6 டன் ரசாயனம் தடவிய மாம்பழங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள 7 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில்  மாம்பழங்கள் ரசாயனங்களைத் தடவிப் பழுக்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஏழு கடைகளில் இருந்து சுமார் 6 டன் மாம்பழங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை ஒன்றிற்கு 5,000 ரூபாய் என மொத்தம் 35,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நேரடியாகப் பழங்கள் மீது ரசாயனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசு விதி இருக்கிறது. 

 

மேலும் உணவுப்பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டின் அடிப்படையில் ரசாயனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் இருக்கும் நிலையில், அவற்றை மீறி நேரடியாகப் பழங்கள் மீது ரசாயனம் பயன்படுத்தப்படுவது தவறு. இதன் அடிப்படையில் அதிகாரிகள் ரசாயனம் தெளிக்கப்பட்ட பழங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால் கடைகளுக்குச் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர். ஒரேநாளில் மிக குறைவான எண்ணிக்கையிலான கடைகளில் இருந்து டன் கணக்கில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.