Skip to main content

தற்கொலை எதிரொலி; 6 பூச்சிக்கொல்லிகளுக்கு 60 நாட்கள் தடை

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

tngovt

 

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில், குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்து, தற்கொலைக்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையில், குறிப்பிட்ட அந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

அதில் மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபெட், புரோபெனோபாஸ்+சைபரமேத்ரின், குளோரோபைரிபாஸ்+சைபர்மெத்ரின் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது . மேலும், மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்