Skip to main content

6 பேர் விடுதலை; நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

 6 persons acquitted; Perariwalan who directly went and welcomed

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று  உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 6 persons acquitted; Perariwalan who directly went and welcomed

 

இந்நிலையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பாக இன்று மதியம் வேலூர் மத்திய சிறைக்கும் வேலூர் பெண்கள் தனிச் சிறைக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் அனுப்பப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து 31 ஆண்டுகளுக்குப் பின் வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்த நளினி விடுதலை செய்யப்பட்டார். பரோலில் இருந்த நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறைக்குச் சென்று தனது பரோலை ரத்து செய்ய கடிதம் வழங்கிய பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

அதே போல், புழல் சிறையிலிருந்து ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த பேரறிவாளன், இன்று விடுதலையான ராபர்ட் மற்றும் ஜெயக்குமாரை வரவேற்பதற்காகப் புழல் சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளிவந்த ராபர்ட் பயாஸை கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன், அவருடன் சிறிது நேரம் உரையாடிய பின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடுதலைக்குப் பின் முருகன், சாந்தன் உள்ளிட்டோரின் முடிவு என்ன? வழக்கறிஞர் பதில்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

What was the result of Murugan, Shanthan and others after liberation? Lawyer answer!

 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக் கைதிகளாக வேலூர் மத்தியச் சிறையில் கடந்த 31 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள் முருகன், நளினி, சாந்தன் உட்பட 6 பேர். இதில் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். 

 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை வேலூர் மத்தியச் சிறையில் உள்ள சாந்தனிடம் அவரது வழக்கறிஞர் ராஜகுரு தெரிவித்தார். அதோடு வழக்கு விசாரணை பற்றிய தகவலை சாந்தன், முருகன் இருவரிடமும் தெரிவித்தார்.

 

சிறைக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜகுரு, “இந்த தீர்ப்பினை வரவேற்பதாகவும் இதற்காக உழைத்த வழக்கறிஞர்கள், நீதியரசர்கள், தமிழக மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சாந்தன் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார். பிறகு ஸ்ரீலங்கா செல்லத் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு பாஸ்போர்ட் போன்ற உதவிகளைச் செய்ய கோரிக்கை வைத்துள்ளார். முருகன், சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் வேலூரில் தனது மனைவியுடன் தானும் இருக்கப் போவதாக தெரிவித்தார்.” எனக் கூறினார். 

 

 

Next Story

" பாலியல் குற்றவாளிகளின் விடுதலையை ஆதரிக்கிறார்கள்; ராஜீவ் வழக்கில் விடுதலையை எதிர்க்கிறார்கள்..." - வழக்கறிஞர் மோகன் பேட்டி

Published on 11/11/2022 | Edited on 12/11/2022

 

ுப


ராஜீவ்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனோடு இந்த வழக்கில் சிறையிலிருந்த மற்ற 6 பேரையும் விடுதலை செய்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் மோகன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். அவர் கூறியதாவது, " இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, ஆனாலும் இது ஒரு காலம் கடந்த தீர்ப்பாகவே கருதுகிறேன். இவர்கள் அனைவரும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருந்துள்ளார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு இந்த சிறைச்சாலை என்பது ஒருவரைத் திருத்துவதாக அமைந்திருக்க வேண்டுமே தவிர, ஒருவரைத் தண்டிக்கக்கூடியதாக அமைந்திருக்கக்கூடாது. அவர்களுக்குத் தண்டனை 1998ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இருந்தாலும் அவர்கள் கொடுத்த கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மிகுந்த காலதாமதம் ஆனது. இதை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் இந்த வழக்கில் தெரிவித்தார். 

 

அதனடிப்படையிலேயே அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது.  அப்போது நீதிமன்றம் தெளிவாகக் கூறியது, இவர்களை மாநில அரசுகள் நினைத்தால் விடுதலை செய்யலாம் என்று. ஆனால் அப்போது இருந்த மத்திய அரசு இவர்களை நாங்கள் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறி வழக்கை இழுத்தடித்தார்கள். அப்போதும் கூட உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 161வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுக்கு விடுதலை செய்ய அனைத்து அதிகாரங்களும் இருப்பதாகத் தெளிவாகக் கூறியது. அதற்கு பிறகும் இத்தனை ஆண்டுக்காலம் இந்த வழக்கு நீண்டுகொண்டே போனதற்கு ஆளுநர்களும், மத்திய அரசுமே காரணம். 

 

பேரறிவாளன் இந்த விவகாரத்தில் விடுதலை செய்யப்பட்டபோது அவர் சிறையில் நடந்துகொண்ட விதம், படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டே உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி அவரை விடுதலை செய்தது. அதற்கு பிறகே நளினியும், முருகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன் போன்றே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 142 பிரிவு என்பது உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரம். அதைப் பயன்படுத்தி நாங்கள் விடுதலை செய்ய முடியாது. நீங்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தீர்வு தேடிக்கொள்ளுங்கள் என்றனர். 

 

அதைத் தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் அங்கே இரண்டு நீதிபதிகள் அமர்வு பேரறிவாளனுக்குக் கிடைத்த அதே விடுதலையை இவர்களுக்கும் வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 161 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். குஜராத்தி பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் எல்லாம் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி சிறையிலிருந்து வெளியே வரும்போது, இத்தனை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த இவர்களுக்கு வெளியே வருவதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. எனவே இதை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பாகக் கருதுகிறேன்" என்றார்.