Skip to main content

அரசு மருத்துவர்கள் 6 பேருக்கு பதவி உயர்வு; மூவர் இடமாற்றம்!

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

6 Govt doctors promoted to 'Chief'

 

அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் மூத்த மருத்துவர்கள் ஆறு பேருக்கு முதல்வராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. மூன்று முதல்வர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

தமிழகத்தில், 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் சென்னை, தஞ்சை, திருச்சி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர்கள் 6 பேர், முதல்வராக (டீன்) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

 

தேனி, பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குநர் ஆகிய மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

 

இதன்படி, மருத்துவக்கல்வி இயக்குநரகத்தின் சிறப்பு அதிகாரியும், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருமான மீனாட்சி சுந்தரம் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். விடுப்பில் சென்றிருந்த, மருத்துவக்கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த பேராசிரியர் முத்துக்குமரன் ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

6 Govt doctors promoted to 'Chief'

 

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி இருதயவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவத்துறை பேராசிரியர் சீனிவாசன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

 

எம்எம்சி மருத்துவக் கல்லூரி உடலியல் துறை பேராசிரியர் மற்றும் இயக்குநர் திருப்பதி, கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியரும் மருத்துவக் கண்காணிப்பாளருமான ராஜஸ்ரீ திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

 

எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி ஹெபடாலஜி துறை பேராசிரியர் நாராயணசாமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், திருச்சி கேஏபி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் சிவக்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.