அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் 24 பேர் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ள நிலையில், அந்த 24 பேர் உட்பட 58 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னை ஆர்.டி.எம். புரத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.