Skip to main content

தமிழ்நாட்டில் 55,982 சிம் கார்டுகள் முடக்கம்; சைபர் க்ரைம் அதிரடி

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

55,982 SIM cards blocked in Tamil Nadu; Cyber crime action

 

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 55,982 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

 

போலி ஆவணங்கள் மூலம் பலரும் தமிழகத்தில் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்த விவகாரம் குறித்து தனது விசாரணையைத் துவங்கிய காவல்துறையினர், போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டு பெற்றவர்களின் விவரங்களைத் தயாரித்து குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி அதை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள். 

 

குறிப்பாக 55,982 சிம் கார்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற போலி சிம் கார்டுகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் இதுவரை முடக்கிய சிம் கார்டுகளை விற்றவர்கள் குறித்து, சிம் கார்டுகளை விற்பனை செய்யும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த விசாரணையின் அடிப்படையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் பரிந்துரை ஒன்றைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. போலி சிம் கார்டுகளை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையிலும் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையிலும் சிம் கார்டுகளை விற்பனை செய்பவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்குப் பிறகு ஷாக் கொடுக்க இருக்கும் சிம்கார்டு நிறுவனங்கள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
SIM card companies to give a shock after the election

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிந்த கையோடு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டண உயர்வு 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ரூபாய் 208 ஆக உள்ள பார்த்தி ஏர்டெலின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 2027 இறுதியில் ரூபாய் 286 என உயரும் என கூறப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் பார்த்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Cybercrime alert For those charging in public places

பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.