Skip to main content

மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ரூ.550 கோடியில் புதிய திட்டம்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஏரிகளில் தேக்கி வைக்கும் வகையில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்தார். அரசு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, திங்கள்கிழமை (ஜூலை 22) ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது.

 


மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள 100 ஏரிகள், குளங்களில் நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இதற்காக 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, காவிரி & கோதாவரி நதிகள் இணைப்புத்திட்டம் நிறைவேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

 

exhaust water

 

 

கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய பங்கீட்டின் படி நீர் முழுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் விரைவுச்சாலை அவசியமானது. கடந்த இருபது ஆண்டுகளாக பயன்பட்டு வந்த சாலையால் விபத்து அதிகரித்துள்ளது. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப, நவீன முறையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. 

 


திமுக ஆட்சிக்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது அதற்குரிய இழப்பீட்டை கொடுக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதிமுக ஆட்சியில் நில எடுப்புக்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு, மாநில வளர்ச்சி, விபத்தை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக மத்திய அரசின் புதிய அதிவிரைவுச்சாலைத் திட்டத்தை தமிழக அரசு வரவேற்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.