Skip to main content

7 வயது சிறுவன் வாயில் 526 பற்கள்... செல்போன் கதிர்வீச்சு காரணமா?

Published on 01/08/2019 | Edited on 02/08/2019

மனிதனுக்கு இயற்கையிலேயே 32 பற்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே அப்படியிருக்க ஒரு 7 வயது சிறுவனின் வாயில் இருந்து 526 பற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 526 teeth in 7-year-old boy's mouth ... Caused by cellphone radiation?

 

சென்னையை சேர்ந்த பிரபுதாஸ் என்பவரின் மகனுக்கு 3 வயது முதல் வாயில் வீக்கம் இருந்துள்ளது. ஆனால் இதனை அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் சிறுவனின் 7 ஆம் வயதில் வாயில் வீக்கத்துடன் அதிக வலி இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிடிஸ் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் சிறுவனின் வாயில் வீங்கிய பகுதியில் 500 க்கும் மேற்பட்ட சிறு சிறு பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பற்களை அகற்ற சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

 526 teeth in 7-year-old boy's mouth ... Caused by cellphone radiation?

 

அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறிதும் பெரிதுமாக 526 பற்கள் அகற்றப்பட்டன. இனி அந்த சிறுவனுக்கு அதேபோல் மீண்டும் பற்கள் முளைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறினாலும் இத்தனை பற்கள் முளைத்தது எப்படி சத்தியம். இதற்கு மரபணு மாற்றம் அல்லது அபரிவிதமான வளர்ச்சி போன்றவையே காரணம் என மருத்துவத்துறை விளக்கியுள்ளது.

 

 526 teeth in 7-year-old boy's mouth ... Caused by cellphone radiation?


இருப்பினும் இதற்கு சுற்றுப்புற சூழலும் காரணமாக இருக்கலாம் எனக்கூறும் மருத்துவர் ரமணி, செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் இதற்கு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.