ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 521 பேருக்கு கரோனா

08:17 PM Apr 17, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு 521 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தமிழகத்தில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 514 ஆக பதிவாகியிருந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,330 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 386 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை-140, கன்னியாகுமரி-44, கோவை-45, திருச்சி-31, திருவள்ளூர்-25, திருப்பூர்-25 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT