Skip to main content

லாரிகள் அதிரடி சோதனை - காவல்துறை, வருவாய்த்துறையினர் நடவடிக்கை!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

50 lorries checked Revenue, Police Action

 

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி இன்று காலை சிதம்பரம் கடலூர் சாலையில் வந்த சில லாரிகளை பிடித்துச் சோதனை செய்தார். அவற்றில் சில லாரிகளில் எம்-சாண்ட் மணல், ஜல்லி உள்ளிட்டவற்றை அதிக பாரத்துடன் ஏற்றிவந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து தீவிர விசாரணை நடத்தும்படி சிதம்பரம் கலெக்டர் உத்தரவிட்டார். இதனடிப்படையில் சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. லாமேக் உள்ளிட்டோர் சிதம்பரம் புறவழிச்சாலை, சின்னகுமட்டி, முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 லாரிகளை அதிரடியாக நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒரு சில லாரிகளின் டிரைவர், லாரியை விட்டுவிட்டு ஓடி விட்டனர். இதையடுத்து லாரிகளுக்கு உரிய பர்மிட் உள்ளதா? ஜல்லி, எம்-சாண்ட் மணல் உள்ளிட்டவை எங்கிருந்து எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது எனத் தீவிர சோதனை நடத்தினர்.

 

இதில் சில லாரிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உரிய ஆவணங்கள் இருந்தும், பெரும்பாலான லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. கூடுதல் பாரம் ஏற்றிவந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளை போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் எடைமேடை நிலையத்திற்கு எடுத்துச் சென்று எடை போட்டனர். அப்போது கூடுதலாகப் பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் காவல்துறையும், வருவாய்த் துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்து லாரிகளைப் பிடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.