Skip to main content

முதியோர்களைச் சந்திக்க 50 கி.மீ. பயணித்த எஸ்.பி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

50 km to meet the elderly. S.P. who traveled

 

மனம் மகிழ்விற்காக பலர் கோவிலுக்கும், பொழுதுபோக்கு இடத்திற்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்வது வழக்கம். ஆனால் மாறாக முதியோர் இல்லத்தைத் தேடி அவர்களிடம் கலந்துரையாடி மனமகிழ்வை ஏற்படுத்திக் கொள்ள 50 கிலோமீட்டர் பயணித்து மனமகிழ்ச்சி அடைந்து வருகிறார் கடலூர் மாவட்ட எஸ்.பி

 

சிதம்பரம், மாரியப்பா நகரில் அன்பகம் முதியோர் இல்லம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் 25-க்கும் மேற்பட்ட முதியோர்கள் உள்ளனர். இங்குள்ளவர்களுக்கு சிதம்பரம் மற்றும் சுற்றுவட்ட பகுதியில் உள்ளவர்கள் பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட நாட்களில் அளிக்கும் உதவியைக் கொண்டு மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது.   

 

இந்நிலையில், கடந்த 5 வருடத்திற்கு முன் சிதம்பரம் டி.எஸ்.பி-யாக பணியாற்றிய ராஜாராமன் இதனையறிந்து இந்த முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியவர்களிடம் பேசிக் கலந்துரையாடி மனமகிழ்ச்சி அடைந்து வந்தார். மேலும் இதனைச் சகிப்பு தன்மையுடன் நிர்வகித்து வரும் சுகுமாரையும் பாராட்டியுள்ளார். பின்னர் இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டு பின்னர் பணி உயர்வு பெற்று மீண்டும் கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.பி-யாக கடந்த 3 மாதத்திற்கு முன் பொறுப்பேற்றார்.

 

50 km to meet the elderly. S.P. who traveled

 

இந்நிலையில் மே 13ம் தேதி திடீர் எனக் கடலூரிலிருந்து சிதம்பரத்திற்கு 50 கிலோமீட்டர் தூரம் இதற்காக மட்டும் பயணித்து முதியோர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். இவரின் திடீர் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை. இவரைப் பார்த்ததும் கட்டி தழுவி அரவணைத்து முதியோர்களின் முகத்தில் மகிழ்ச்சி ஒளி வீசியவாறு வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள முதியவர்களிடம் கலந்துரையாடி 2 மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் மனம் திறந்து பேசி மனம் மகிழ்வு அடைந்தார். இது முதியோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

பின்னர் அவர் முதியோர்களிடம் அடுத்தமுறை வரும்போது சம்பளம் வாங்கியவுடன் அனைவருக்கும் துணி எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அதற்கு முதியவர்கள் பல லட்சங்கள் செலவு செய்து படிக்கவைத்து வேலை வாங்கிகொடுத்து சொத்துபத்து எழுதிவைத்த பிள்ளைகளே இதுபோல் வந்து பார்த்துப் பேசியது இல்லை. யாரென்று தெரியாத எங்களிடம் நீங்கப் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோல வந்து அன்பா பேசினாலே போதும்பா எனக்கூறியது எஸ்பி உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் தொடர்ந்து நேரம் ஒதுக்கி வருவதாகவும் உறுதி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.