Skip to main content

ஐம்பது கோடி அபேஸ்... அதிமுக பிரமுகர் மீது மார்க்கெட் வியாபாரிகள் புகார்

Published on 09/05/2019 | Edited on 14/05/2019

ஈரோடு பிரதானமான மார்கெட் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்.  இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். வியாபாரிகள் சங்கத்தில் 1000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்த சங்கத்தின் தலைவராக உள்ளவர் - ஈரோடு அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான பழனிச்சாமி என்பவர். 

 

50 crores cheating... Market Merchants complain against ADMK  leader

 

இவரது மனைவி காஞ்சனா மாநகராட்சி மண்டல தலைவராக இருந்தார். மகன் மணிகண்டன் மாவட்ட 'ஜெ' பேரவை பாசறை தலைவராக இருக்கிறார். சங்க தலைவரான பழனிச்சாமி காய்கறி வியாபாரிகளுக்கு குடியிருப்பு வீட்டுமனை நிலம் வாங்கித் தருவதாகக் கூறி  சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில்  பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் பல வருடங்கள் கடந்தும் நிலம் வாங்கித் தரவில்லை. இதன் மொத்த தொகை சுமார் ஐம்பது கோடி.

 

 

அ.தி.மு.க.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் துணையுடன் பழனிச்சாமி இருந்ததால் வியாபாரிகள் கொடுத்த பணம் என்னாச்சு ? நிலம் எங்கே? என்று கேள்வி கேட்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் பல வருடங்களாக மார்கெட் சுங்க வரி வசூல் பழனிச்சாமி கையிலேயே இருந்தது. சென்ற மாதம் நடந்த ஏலத்தில் சுங்க வரி வசூல் உரிமம் தி.மு.க.நிர்வாகிகள் வசம் வந்தது.          இதனால் வியாபாரிகளுக்கு தைரியம் ஏற்பட்டு கணக்கு கேட்க தொடங்கினார்கள். இதனால் சங்க தலைவரான அ.தி.மு.க.பழனிச்சாமி நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு கணக்கு வழக்கு காட்டுவதாகக் கூறி கூட்டம் போட்டார்.

 

50 crores cheating... Market Merchants complain against ADMK  leader

 

அதன்படி சங்க உறுப்பினர்கள் நேதாஜி மார்க்கெட் பகுதியில் கூடியிருந்தனர். நான் சொல்வது தான் கணக்கு கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்று பழனிச்சாமி பேச சங்க நிர்வாகிகள் கொதிப்படைந்து  அ.தி.மு.க.ஆட்சியை பயன்படுத்தி எங்களிடம் வசூலித்த ஐம்பது கோடியை ஏமாற்றுகிறீர்களா? என கேட்டதோடு, தக்காளி வியாபாரி தர்மபுரியான் என்பவர் சங்க கணக்கு வழக்குகள் முறையாக கொடுக்க வேண்டும் என கூறி விட்டு அவரது கடைக்கு சென்று விட்டார்.

 

அதன் பிறகு பழனிச்சாமியின் மகனும் அ.தி.மு.க. பாசறை மாவட்ட தலைவருமான மணிகண்டன் ஐம்பதுக்கும் மேற்பட்ட அடியாட்களை திரட்டிக் கொண்டு போய்  வியாபாரி தர்மபுரியானை அவரது கடையில் வைத்து தாக்கியுள்ளனர். அ.தி.மு.க. அடியாட்களால் தாக்கப்பட்ட வியாபாரி தருமபுரியான் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து  தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தார்.

 

ஆட்சி அதிகாரம் பறிபோகிற நிலையில் ஆங்காங்கே மக்களை மிரட்டி ஏமாற்றிய அ.தி.மு.க. தாதாக்களின் கொள்ளையடிப்பு வேலை வெளி வரத்தொடங்கியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.