பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்று திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.

Advertisment

G. V. Prakash Kumar

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ச்மேன்' படம் இலவசமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது அவர், தங்கள் படக்குழு சார்பில் பொள்ளாச்சியில் பொது இடங்களில் பொருத்த 50 சிசிடிவி கேமராக்கள் வழங்கியுள்ளோம். குழந்தைகளை பெற்றோர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். இது அவசியமான ஒன்று. குழந்தைகள் பற்றி பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் என்ன நடக்கிறது. யாரிடம் எப்படி பேச வேண்டும். யார் யார் உங்களிடம் பழகுகிறார்கள். கண்காணிப்பு மிக மிக அவசியம். பெற்றோருக்கும் சில வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் கல்வி அவசியம். இதனை அரசு செய்ய வேண்டும். good touch bad touch பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். இவ்வாறு கூறினார்.