Skip to main content

ஒரு வயது குழந்தையை 1 லட்சத்துக்கு விற்பனை – தாய் உட்பட 5 பேர் கைது.

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா. திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன் என்பவருடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சத்யா, ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கணவர்களை பிரிந்த நிலையில் மூன்றாவதாக முருகனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். முருகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். சத்யா இவருக்கு இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடதக்கது.

 

women arrrested

முருகன் – சத்யா இருவரின் திருமண வாழ்வின் அடையாளமாக ரேணுகாதேவி என்ற மகளும் ஆதித்தியா என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை ஆதித்தியா பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் முருகன் காசநோயால் பாதிக்கப்பட்டு தர்மபுரியில் தங்கி அங்குள்ள அரசு மருத்துவமனையிலேயெ சிகிச்சைக்கு பெற்றுள்ளார். கடந்த வாரம் வாணியம்பாடி திரும்பி வந்துள்ளார். வந்தவர் தனது பிள்ளைகளை கேட்க, மகள் ரேணுகாதேவி மட்டும் இருந்துள்ளார். குழந்தை ஆதித்யா இல்லாமல் இருப்பதை கண்டு எங்கு குழந்தை என கேள்வி கேட்டுள்ளார். குழந்தை காணோம், யார் தூக்கிக்கிட்டு போனாங்கன்னு தெரியல என சாதாரணமாக சொல்லியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த முருகன், வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்த போலிஸாரிடம், எனது பெரியம்மா கீதா, தெரிஞ்சவங்க ஆண் குழந்தை கேட்கறாங்க, வித்துடறியான்னு கேட்டாங்க. நானும் சரின்னு சொன்னன் கவிதா என்பவர் மூலமாக பெங்களூர் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த ரஹமத் ஷகிலா தம்பதியினருக்கு ஒரு லட்சத்திற்கு ரேட் பேசி விற்று தந்தார்கள். அட்வான்ஸாக ரூபாய் 65 ஆயிரம் தந்துவிட்டார்கள். மீதி பணம் வரவேண்டும். குழந்தையை விற்று இரண்டு மாதம் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் செப்டம்பர் 24ந்தேதி பெங்களூர் ஜெயநகர் பகுதிக்கு சென்ற வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார், குழந்தையை விலைக்கு வாங்கி சென்ற ரஹமத் ஷகிலா தம்பதியினர் வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை விற்ற தாய் சத்யா, அவருக்கு உதவிய அவரது பெரியம்மா கீதா, இடைத்தரகர் கவிதா ஆகியோரை வாணியம்பாடி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் இவர்கள் 5 பேரும் கைது செய்யப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.