Skip to main content

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை; தந்தை - மகன் வெறிச்செயல்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

5 people arrested for beating youth in love issue
செல்வம் - அவரது மகன்

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனுமந்த உபாசகர் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்த சுகேஷ் என்ற 19 வயது வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் அச்சிறுமி வசிக்கும் அனுமந்த உபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த டிகிரி படிக்கும் செல்வம் என்பவரின் 18 வயது மகன் தீபக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. காதலித்ததோடு அந்த சிறுமியின் பின்னால் சென்று காதல் டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தான் காதலிக்கும் சுகேஷிடம் ஒருதலை காதலனின் டார்ச்சரை கூறியுள்ளார்.

 

கடந்த நவம்பர் எட்டாம் தேதி தீபக் வீட்டிற்குச் சென்ற சுகேஷ், நீ ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் நானும் சின்சியராக காதலிக்கிறோம். அதனால் அவளை தொந்தரவு செய்யாதே என மிரட்டலாகவும், எச்சரிக்கையாகவும் கூறியதாக கூறப்படுகிறது. என் வீட்டுக்கே வந்து அவளை காதலிக்கிறேன், நீ ஒதுங்கிக்கன்னு சொல்றியா என ஆத்திரமடைந்த தீபக், அவருடைய தந்தை செல்வம், தீபக்கின் கூட்டாளிகள் 20 வயதான பாலாஜி, 25 வயதான தருமன், 16 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து சுகேஷை வீட்டுக்குள் இருந்து தெருவுக்கு இழுத்து வந்து கம்பி, கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தலையிலும் பலமாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்த சுகேஷை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இதுகுறித்து அடிப்பட்டவரிடம் வாக்குமூலம் வாங்கி வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரை திருப்பத்தூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுகேஷ் நவம்பர் 12 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியான  குடும்பத்தினர் மற்றும் சுகேஷின் நண்பர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் டூ வாணியம்பாடி செல்லும் பிரதான சாலையில் ஒன்றிணைந்து இதற்குப் பழிக்குப் பழி வாங்கவேண்டும், அடித்தவர்கள் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தலாமா என ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்

 

இந்நிலையில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை சுகேசின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு திருப்பத்தூருக்கு வந்தது. வீட்டில் இருந்து சுடுகாட்டிற்குச் செல்லும் சாலையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளை அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மூட வைத்தனர். அதன் பின்னர் 100க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.