சேலத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட ஒடிசா மாநில வாலிபரையும் கைது செய்தனர்.
சேலம் ரயில்வே காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜூன் 24),தன்பாத்& ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஏறி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில்அமர்ந்திருந்தஒருவாலிபரைப்பிடித்து விசாரித்தனர். அவருடைய பெயர்மோத்திநாயக் (25) என்பதும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அவர்பண்டல்பாண்டலாகக்கட்டி, கடத்தி வந்துள்ளார்.
ஒடிசாவில் இருந்துஜோலார்பேட்டைவருவதற்குடிக்கெட்எடுத்துள்ளார். ஆனால், அதே ரயிலில்கஞ்சாவைசேலத்திற்குகடத்தி வந்திருப்பதும், இங்குள்ள சில தரகர்களிடம்விற்பனைசெய்வதற்காககொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்துமோத்திநாயக்கை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.