Advertisment

5 மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களுடன் உரையாடிய முதல்வர்

nn

தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஐந்து மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மக்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Advertisment

காணொளியில் இது தொடர்பாக பேசிய தமிழக முதல்வர், 'மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன்கள் உரியவர்களுக்கு சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதோடு, முகாமிற்கு வந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பதை மக்களிடம் நேரடியாக கேட்டு அறிந்து கொண்டார். அதேபோல் அதிகாரிகளிடமும் இந்த திட்டத்தின் செயலாக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

Advertisment
TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe