Skip to main content

மதுபோதையில் ரயிலில் இடையூறு... 3 போலீசார் உட்பட 5 பேர் கைது!

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

5 arrested, including 3 policemen, for obstructing a train under the influence of alcohol!

 

சென்னை எக்மோரில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு,  முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, வழியாக தூத்துக்குடி நோக்கி செல்வதற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெறும் திருமணத்திற்கு, சென்னையில் பணிபுரியும்  காவலர்கள் முருகன், செந்தில்குமார், மாணிக்கராஜ், மற்றும் அவரது உறவினர்கள் முத்துக்குமார், பொன்னுசாமி ஆகிய 5 பேரும் முத்து நகர் எக்ஸ்பிரசில் வந்து கொண்டிருந்த போது, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதை தட்டிக்கேட்ட சக பயணிகளிடம் தகாத வார்த்தைகள் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததால், ரயிலில் வந்த சக பயணி சிவகுமார் என்பவர்,தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு காவல்துறை டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து, பதிவு ஒன்று செய்துள்ளார். அந்த டிவிட்டர் பதிவில் மது போதையில் காவலர்கள் S3 என்ற பெட்டியில் சீட் நம்பர் 72, 80 ல் இருப்பவர்கள், நியூசென்ஸ் செய்வதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது ரயிலானது விழுப்புரம் வந்தடைந்து விட்டதாகவும் பதிவு செய்துள்ளார்.  

 

5 arrested, including 3 policemen, for obstructing a train under the influence of alcohol!

 

டிவிட்டர் பதிவை அறிந்த  தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் நேற்றிரவு 11 மணியளவில், விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர், விருத்தாசலம் வந்தடைந்த முத்துநகர் எக்ஸ்பிரஸில், மதுபோதையிலிருந்த காவலர் மற்றும் அவரது உறவினர்களை, ரயிலிலிருந்து இறக்கி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவலர் மற்றும் அவரது உறவினர் 5 பேரையும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. பயணிகளுக்கு இடையூறாக இருந்த காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் அவரது உறவினர்களை, சொந்த ஜாமீனில் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.