Skip to main content

குமாியில் 490 கோவில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன...

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

490 temples opens in kanniyakumari

 

 

கரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக தமிழகத்தில் தேவசம் போா்டு கோவில்கள் மற்றும் கிராம கோவில்கள் மூடப்பட்டு பக்தா்கள் தாிசனத்துக்கு  தடை விதிக்கப்பட்டன. மேலும் அர்ச்சகர்கள் மட்டுமே கோவிலை திறந்து பூஜைகள் நடத்த அனுமதிக்கபட்டனா். இதனால் பக்தா்கள் கடவுளை தாிசனம் செய்ய முடியாமல் கடந்த 5 மாதங்களாக அவதியடைந்தனா். இதற்கிடையில் ஓரு மாதத்திற்கு முன் 10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் வரக்கூடிய கோவிலை மட்டும் திறக்க அரசு அனுமதித்தது.  ஆனால் பொிய கோவில்கள் திறக்கபடாமல் இருந்தன.

 

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தளா்த்தியதால் தேவசம் போா்டு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்கள் அதே போல் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளி வாசல்கள் 1.09.2020 முதல் திறக்கப்பட்டு பக்தா்கள் தாிசனத்துக்கு அரசின் நெறிமுறைகளை பின்பற்றி அரசு அனுமதியளித்தது. அதன்படி குமாி மாவட்டத்தில் தேவசம்போா்டின் கட்டுப்பாட்டில் உள்ள 490 இந்து கோவில்களின் நடை திறக்கபட்டு பக்தா்கள் தாிசனத்துக்கு அனுமதிக்கபட்டனர். இதில் முக்கிய கோவில்களான கன்னியாகுமாி பகவதி அம்மன் கோவில், சுசிந்திரம் தாணுமாலையன் கோவில், மண்டைக்காடு ஸ்ரீபகவதி அம்மன் கோவில், நாகா்கோவில் நாகராஜா கோவில், குமாரகோவில் முருகன் கோவில், திருவட்டாா் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதிகாலையில் இருந்தே பக்தா்கள்  குவிய தொடங்கினாா்கள்.

 

கோவிலுக்குள்ள செல்லும் பக்தா்கள் மாஸ்க் அணிந்த நிலையில், கோவில் ஊழியா் பக்தா்களுக்கு உடல் வெப்பத்தை தொ்மல் ஸ்கேனா் மூலம் பாிசோதனை செய்து  கைகளை சானிடைசா் மூலம் சுத்தம் செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதித்தனா். கோவிலுக்குள் பக்தா்கள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த வட்டத்துக்குள் வாிசையாக  நின்று சாமி கும்பிட்டனா். மேலும் சில கோவில்களில் பக்தா்களுக்கு அர்ச்சகர்கள்  நேரடையாக பிரசாதங்கள் வழங்காமல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்த பிரசாதங்களை பக்தா்கள் எடுத்து சென்றனா். சில கோவில்களில் பக்தா்களுக்கு நேரடையாக பிரசாதம் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.