Skip to main content

சர்வதேச அழகி போட்டியில் வென்ற 49 வயது கோவை பெண் ஜெயஸ்ரீ!

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
ja

 

கோவையை சேர்ந்த 49 வயதான பெண்மணி சர்வதேச அளவிலான அழகி போட்டியில் 3ஆம் இடத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். வயதான பெண்களிடையே தன்னம்பிக்கையையும், உடல் ஆரோக்கியத்தையும் வலியுறுத்தவே இந்த போட்டியில் பங்கேற்றதாக அழகி போட்டியில் வென்ற ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

 

 கோவை சவுரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 49 வயதான பெண்ணான ஜெயஸ்ரீ . இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு  கலிபோர்னியாவில் Mrs.GLOBE CLASSIC என்கிற சர்வதேச அளவிலான அழகி போட்டி நடைபெற்றது. கடந்த 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் 45 வயதிற்கு மேல் உள்ள இல்லத்தரசிகள் பங்கேற்றனர். மொத்தம் 85 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் இடத்தை யூ.எஸ்.ஏ.வும், இரண்டாம் இடத்தை ஜப்பானும் மூன்றாம் இடத்தை இந்தியா சார்பில் கோவையை சேர்ந்த ஜெயஸ்ரீயும் பெற்றுள்ளார். தனிப்பட்ட விவரங்கள், ஆளுமை திறன், PHOTOSHOOTS, உடை, அறிமுகம், நேர்காணல் என 7 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில், இறுதிச்சுற்றில் ஜெயஸ்ரீ நமது பாரம்பரிய உடையான சேலையில் அணிவகுப்பை மேற்கொண்டுள்ளார். 

 

 கடந்த 2006ஆம் ஆண்டு Mrs.COIMBATORE, 2016ல் Mrs.INDIA, Mrs.INDIAN OCEAN, Mrs.PHOTOGENIC ஆகிய பட்டத்தை வென்றுள்ள ஜெயஸ்ரீ, கடந்த 23ஆண்டுகளாக உடற்பயிற்சியாளராகவும், உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வயதாக பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பதும், முறையான உடற்பயிற்சி இல்லாததால் நாளடைவில் ஏற்படும் உடல் பாதிப்புகளை தடுக்கவே இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று வருவதாக கூறும் ஜெயஸ்ரீ, வெற்றி, தோல்வி என்பது அவரவர் எடுக்கும் முடிவில் உள்ளதால் பெண்கள் எதையும் துணிச்சலாகவும், யாரையும் எதிர்பார்க்காமல் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளிலும், பெண்கள் உடல் ஆரோக்கியாம் குறித்து விழிப்புணர்வில் ஈடுபடுவதாக தெரிவித்தார். சர்வதேச அழகி போட்டியில் வென்றுள்ள ஜெயஸ்ரீக்கு 23 வயதில் ஓரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

உ.பி.யில் பரபரப்பு; ஆஸ்கர் விருது பெற்ற சிறுமியின் வீடு இடிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Oscar winner Pinki house demolished

 

உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது. 

 

அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர். 

 

இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர்  கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன்  தெரிவித்திருக்கிறார்.