Skip to main content

வேலை வாங்கித் தருவதாக 47 லட்சம் மோசடி... மதுரையில் தம்பதி கைது!

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

47 lakh rupees fraudulent job claim ... Couple arrested!

 

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மதுரையை சேர்ந்த ஸ்ரீபுகழ் இந்திரா- ரேணுகா என்ற தம்பதியினர் தணிக்கை நிறுவனம் நடத்தி வரும் பஞ்சவர்ணம் என்பவரை தொடர்புகொண்டு திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வேண்டுமென்றால் உங்களுடைய மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி உள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய பஞ்சவர்ணம் 47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை பல தவணைகளாக அரசு வேலை வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த தம்பதியிடம் கொடுத்துள்ளார்.

 

பணம் கொடுத்து அதிக நாட்கள் ஆகியும் தம்பதியினர் இறுதிவரை வேலையும் வாங்கித் தராமல், கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் இருந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பஞ்சவர்ணம் முறையிட்ட நிலையிலும் தம்பதியினர் பணத்தை தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் போலீசாரிடம் பஞ்சவர்ணம் புகார் கொடுத்த நிலையில், ஸ்ரீ புகழ் இந்திரா-ரேணுகா தம்பதியினரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.